Tuesday, August 4, 2009

மனிதனே நீ மனிதனா?

தலைப்பைப் படித்து விட்டு யோசித்துப் பார்க்கிறீர்களா?
யோசித்து
உங்களுக்குள் ஒரு நல்ல முடிவை எடுத்தால் மகிழ்ச்சி.

உங்களுக்குள் இருக்கும் மனிதனை எப்பொழுதாவது தேடி இருக்கிறீர்களா?
நாளுக்கு நாள் மனிதன் எடுக்கும் ஒவ்வொரு பரிமாணத்தால் இயற்கை எத்தனை அழிவுகளை சந்தித்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்?
மனிதனே என்ன சாதித்திருக்கிறாய்?

"மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போலத் தன்னை தந்து தியாகி ஆகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது கோயில் ஆகலாம்"
என்பது எவ்வளவு அழகான கண்ணதாசன் வரிகள் ஆனால் நம்மில் யாரவது இப்போது அப்படி இருக்கிறோமா?
இன்று மனிதனின் மனம் கோயில் ஆக
இல்லை
சுயநலத்தின் இருப்பிடமாக இருக்கிறது.

"
உலகம் அது அழகு கலைகளின் சுரங்கம்" ஆனால் இன்று அது அசுத்தத்தின் இருப்பிடமாக இருக்கிறது.

பூனையைப்
பார்த்திருக்கிறீர்களா ஐந்து அறிவுள்ள ஒரு சிறிய உயிர். அதன் நடவடிக்கைகளைக் கவனித்திருக்கீர்களா? அதற்கு இயற்கை உபாதை ஏற்படும் போது யாரும் காணாமல் மலம் கழித்து விட்டு அதை மூடி விட்டு செல்லும்...ஆனால் மனிதனோ அவசரம் என்று வந்து விட்டால் நடைபாதை ஓரங்களிலோ, செடியின் ஓரங்களிலோ எங்கு வேண்டுமானாலும் ஓடி விடுவான்

யார் தன்னை கேட்கப் போகிறார்கள் என்ற அலட்சியம்...
ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு அதான் கட்டி வைத்திருக்கிறார்களே "கட்டணக் கழிப்பிடம்" அதை உபயோகித்தால் என்ன?

ஒ!அதற்கு கட்டணம் தர வேண்டுமோ? ஆனால் இயற்கைக்கு தர வேண்டாமே! மனிதா உன்னை நீ எப்பொழுது திருத்திக் கொள்ளப் போகிறாய்?

இயற்கைக்கு
உன்னால் எவ்வளவு தீங்கு விளைகிறது என்பதற்கு ஒரு உதாரணம்....
சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்று மனிதனால் இயற்கைக்கு ஏற்படும் ஆபத்துக் குறித்து ஆய்வு ஒன்று நடத்தியது.... இயற்கை பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் அனுப்புமாறும் கேட்டிருந்தது... அதில் வெற்றி பெற்ற புகைப்படம் எது தெரியுமா? கடலுக்கடியில் வாழும் டால்பின் என்ற உயிரினம் அதன் கழுத்தில் நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கவரோடு நீந்தி வரும் காட்சிதான்..... இப்படியே போனால் உலகம் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை..



எத்தனை வகையில் இயற்கை நம்மால் பாதிக்கப்படுகிறது......
வாகனப்புகையாலும்,தொழிற்சாலை புகையாலும் காற்றுமண்டலம் அசுத்தப்படுத்தப்பட்டு இன்று ஓசோன் படலம் ஓட்டை பட்டு அடுத்த ஒரு பேரழிவுக்காகக் காத்திருக்கிறோம்.....
இயற்கையை அழித்தது போதாது என்று மனிதா நீ உன்னையே அழித்து வருகிறாய்.........
புரியவில்லையா? "தீவிரவாதம்"







இதைப் படிக்கும் போது உங்களுக்குத் தோன்றும் "ச்சே ஏன் எல்லாரும் இப்படி செய்யறாங்க" என்று....

"எல்லாரும்" என்று யோசிப்பதை விட நீங்கள் இந்த சமூகத்தில் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்....

நான் என்ன தப்பு செய்தேன் என்று நினைக்காதீர்கள்......முகம் காட்டும் கண்ணாடி முன் நின்றால் உங்கள் உருவம் தெரிகிறதா? அதைப்போல்தான் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களும் உங்களின் பிரதிபலிப்புதான்.....

நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை செய்தால் தீமைதான் விளையும்...

யாரோ ஒருவரின் சுயநலத்தாலும் பணத்தாசையலும் தானே இன்று தீவிரவாதம் பெருகி வருகிறது...


ஒளி வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருந்த மும்பை தாஜ் ஹோட்டேல்லின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்....
இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் எத்தனை உயிரிழப்பு.....
இதன் மூலம் அவர்கள் சாதித்து கொண்டதுதான் என்ன.....
உங்களில் எத்தனைப் பேருக்கு இந்த உலகம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியும்...

அதைக் காப்பற்ற உங்களில் யாரவது முயற்சி செய்திருக்கிறீர்களா?
உங்கள் கைகளால் ஒரு மரக்கன்றை நட்டு வைத்திருக்கிறீர்களா?

அரசாங்கம் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறதே "வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்" என்று செய்திருக்கிறீர்களா?

வேறொன்றும் வேண்டாம் இதைப் பற்றி விவாதித்திருப்போமா?
டீக்கடை பெஞ்சில், வீட்டுத் திண்ணயில், அலுவலகத்தில் தேநீர் இடைவேளையில், அலுவலகத்துக்குச் செல்லும் போது ரயிலில், பேருந்தில், எப்போதாவது விவாதித்திருப்போமா?

எங்கே அந்த நடிகர் நடிச்ச படம் ஓடலையே? அந்த நடிகை போட்டிருந்த டிரஸ் நல்லா இருந்ததில்லே? அறிவைத் தூண்டுவது பழைய பாடலா? அல்லது புதிய பாடலா? என்று பட்டி மன்றம் வைத்து பொழுதைக் கழிக்கவே நேரம் சரியாய் இருக்கிறது....

எங்கே நாம் உலகம் வெப்ப மயமாதல் பற்றி விவாதிக்கப் போகிறோம்...
ஊடகங்களிலாவது மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் எதாவது ஒரு நிகழ்ச்சிஉலகம்வெப்ப மயமாதல் பற்றி வந்ததுண்டா?

நடனப் போட்டிக்கும், பாட்டுப் போட்டிக்கும், மற்ற நிகழ்ச்சிக்கும் பணத்தை வாரி வாரி இறைக்கும் ஊடகங்கள் உலகம் வெப்ப மயமாதல் பற்றியும் ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்க செலவு செய்யலாமே?

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளின் முகப் பூச்சுக்கு ஆகும் செலவில் பாதி கூட இதற்கு ஆகாதே?

ஆறடி நிலத்துக்குள் அடங்கப் போகும் உடம்பிற்காக இன்னும் இயற்கைக்கு எத்தனை அழிவுகளை உண்டாக்கப் போகிறோம்,,,

மனிதன் தன் ஆதாயத்துக்காக தன் சுயநலத்துக்காக இயற்கையைப் பாழாக்குவது எப்படி இருக்கிறது என்று தெரியுமா.... மரத்தின் நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு அதன் அடிக் கிளையை வெட்டுவது போலாகும்..

இறுதியில் அழிவது மனிதனாகத்தான் இருக்கும்..

பணம் பணம் என்று மனிதருக்குள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அந்தக் காகிதத்தின் பின்னால் ஓடி என்ன சாதித்து விட்டோம்?......
பணம் பணம் என்று ஓடி இறுதியில் உங்கள் உதடுகள் உச்சரிக்கும் வரிகள் இதுவாகத்தான் இருக்கும்.
"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்..."


நண்பர்களே ! அரிதாரம் பூசி வாழும் உங்கள் முகத்திரையைக் கிழித்தெறியுங்கள்....
மனிதராக வாழுங்கள்..........

என் கருத்துக்கள் உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் பின்னூட்டம் இடவும்...நன்றி......















3 comments:

  1. Very Interesting Artical..I Wish ur writing get going sucessful.

    ReplyDelete
  2. இந்த தலைவருங்க எல்லாரும் உலக வெப்பமயமாதல் குறித்து வாய் கிழிய பேசுறாங்களே ஒழிய எதுவும் உருப்படியா செய்ய காணோம்.

    தனி மனித ஒழுக்கம் பத்தி எவ்வளவு தான் சொன்னாலும், எவன் கேட்கிறான். எப்படியோ இயற்கையோடு மோதி இவனும் கூடிய சீக்கிரம் சமாதி ஆக போறான்...!

    ReplyDelete
  3. //தனி மனித ஒழுக்கம் பத்தி எவ்வளவு தான் சொன்னாலும், எவன் கேட்கிறான். எப்படியோ இயற்கையோடு மோதி இவனும் கூடிய சீக்கிரம் சமாதி ஆக போறான்...! //


    வருகைக்கு நன்றி ரசிகரே..... நல்லது நடக்கும் என எதிர்பார்த்து காத்திருப்போம்...

    ReplyDelete