Tuesday, September 22, 2009

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது (2)

ரொம்ப அசதியா இருக்கீங்களா அப்போ வாங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்.... 
 

கால் வலின்னு அட்மிட்டான உங்களுக்கு வயித்தில ஆபரேஷன் செய்திருக்கிறார் ...ஏன்னு நீங்க கேக்கலையா...?
ஏன் கேக்கணும் ...அந்த டாக்டர பத்தி தெரிஞ்சுதானே வயித்து வலிக்கு பதிலா கால் வலின்னு சொல்லி சேர்ந்தேன்....


என் தாத்தாவுக்கு நூறு வயசாகுது ... ஆனா இதுவரைக்கும் டாக்டர்கிட்ட போனதே கிடையாது..
உன் தாத்தாவுக்கு நூறு வயசுன்னு சொல்லும் போதே நெனச்சேன்...


ஐயோ  டாக்டர் என்ன இது சாவுக்கு முன் சாவுக்கு பின் அப்படின்னு எழுதியிருக்கு..?
அட ஏன் பதர்றீங்க ... சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அதத்தான் அப்படி சுருக்கமா  எழுதியிருக்கேன்..

ஊசி போட்ட பிறகும்  எதுக்கு டாக்டர் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க..?
இல்ல.. உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு பாக்கணும் அதான்...

நீங்க இங்க கிளீனிக் ஆரம்பிச்சதிலிருந்து உங்கள தவிர இதுவரைக்கும் நான் வேற யார்கிட்டயும் பாக்கரதில்லே...
நானும் அப்படித்தான்.. உங்கள தவிர வேற யாருக்கும் இதுவரைக்கும் ட்ரீட்மென்ட் செஞ்சதே இல்ல..

இந்த டாக்டர் ஒரு அரசியல்வாதின்னு எப்படி சொல்றீங்க?
ஒட்டு எண்ணிக்கை குறைஞ்சுடும்னு தேர்தல் வரைக்கும் எந்த ஆபரேஷனும் செய்ய மாட்டேன்னு சொல்றாரே...

டாக்டர் மாப்பிள்ளையா பார்த்தது தப்பா போய்டுச்சு ..
ஏன் என்னாச்சு?
பெண் பாக்க வரீங்களான்னு  கேட்டதுக்கு  48மணி நேரம் போனதுக்கு அப்புறம் தான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்லிட்டாரு .....

ஆபரேஷன் பண்ணும் போது பிழைச்ச பேஷன்ட் தையல் பிரிக்கும் போது இறந்துட்டாரு..
அதெப்படி?
டாக்டர் ஏதோ நெனப்புல போஸ்ட் மாட்டம் பண்ணிட்டாரு..


அந்த டாக்டர் ரொம்ப மோசம்..
ஏன் அப்படி சொல்றீங்க?
பேஷன்ட்ட பாத்து நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேக்கறாரு ...
இதிலென்ன தப்பு?
ஆச்சரியமா கேக்கிறாரே?

ரேஷன் கடையில அரிசி பருப்பு எல்லாமே போடறாங்க..
உளுந்து போடறாங்களா?
உளுந்து எல்லாம் போடல உக்காந்துதான் போடறாங்க..


மீண்டும் சந்திப்போமா  ......

5 comments: